×

மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது

சிதம்பரம், மே 3: சிதம்பரம் சுற்று வட்டார பகுதியில் அதிகளவில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்பனை நடைபெற்று வருவதாக நகர, தாலுகா போலீசார், சிதம்பரம் நகர பல்வேறு பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே பெட்டிக்கடையில் மது பாட்டில்களை மறைத்து வைத்து விற்றதாக வைப்பு சாவடி சுரேஷ்(36) என்பவரை கைது செய்தனர். அதேபோல், அண்ணாமலை நகர் போலீசார் சோதனையில் கூத்தன் கோயில் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த பாலசுப்ரமணியன்(50) என்பவர் அப்பகுதியில் மது பாட்டில்கள் விற்பனை செய்து வந்ததை பிடித்து அவரை கைது செய்து, அவரிடம் இருந்த மதுபாட்டில்களை பறி
முதல் செய்தனர்.

மேலும் வடக்கு மாங்குடி புதுதெருவை சேர்ந்த பொற்கை பாண்டியன்(40), நாஞ்சலூர் அடுத்துள்ள வக்காரமாரி பகுதியை சேர்ந்த ஆசைத்தம்பி (45) ஆகியோர் மது பாட்டில்கள் விற்பனை செய்ததை பிடித்த போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

The post மதுபாட்டில் விற்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,taluk ,Dinakaran ,
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்